Welcome to My Website






திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் விற்றமின் பிபிபீ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!

குழந்தைகள் வளர்ச்சிக்கு வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கிய மாகவும், பலமாகவும் இருப்பார்கள்.!

இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!

உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படு கிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகின்றன.!

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!

இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.இதயத் துடிப்பு சீராகசிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார் கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும். சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

மல்லாகம் பழம்பதி பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் கடந்த புதன் கிழமை இரவு 7.30 மணிக்கு இடம் பெற்றது பிள்ளையார் இர வீதி உலா தேரில் வருவதைப் படங்களில் காணலாம்


தேவையான பொருட்கள்

உலர்ந்ததிராட்சை-250 கிராம்

மைதா-500 கிராம்

சீனி- 500 கிராம்

மாஜரீன் -500 கிராம்

முட்டை-10

பேக்கிங் பவுடர்-1 பக்கெட்

துருவிய சொக்லேட்-250 கிராம்

வனிலா எசன்ஸ்-2 தே.க

செய்முறை

மைதாவையும் பேக்கிங்பவுடரையும் சேர்த்து 4-5 முறை சலித்து வைக்கவும்.

திராட்சையை மைதாக் கலவையுடன் கலந்து வைக்கவும்.

முட்டையை உடைத்து மஞ்சள்கரு ஒரு பாத்திரத்திலும் வெள்ளைக்கரு ஒரு பாத்திரத்திலும் எடுத்து வைக்கவும். மாஜரீனையும் சீனியையும் சேர்த்து கிறீமாகும் வரை நன்றாக அடிக்கவும்.

அக் கலவையுடன் மஞ்சள்கருவைச் சேர்த்து அடிக்கவும்.

வெள்ளைக்கருவை நுரை பொங்க அடிக்கவும்.

மாஜரீன் கலவைக்குள் வெள்ளைக்கருவை சேர்த்து அடிக்கவும்.

பின்பு வனிலா எசன்ஸ், மைதாமாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மரத்தடியால் கலக்கவும்.

ஓவனை முற்கூட்டியே சூடு படுத்தவும்.

கேக் ரேயில் பேக்கிங் பேப்பரை விரித்து இக் கலவையை ஊற்றவும்.

175° டிகிரியில் 40 நிமிடம் பேக் செய்யவும்.

பின்பு வெளியில் எடுத்து ஆறிய பின்பு கேக்கை திருப்பி ஒரு தட்டில் போடவும். அதன் மேல் மாஜரீனைப் பூசி துருவிய சொக்லேட்டை தூவி, வெட்டிப் பரிமாறவும்.


நம்மில் தலைமுடிப் பிரச்சினை இல்லாதவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இதற்குக் கிடையாது. பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு தலைப்பொடுகு, இளநரை... இவை ஓயாதப்பிரச்சினை. ஆண்களுக்கு இவை களைவிட தலையாயப் பிரச்சினை வழுக்கை ஏற்படுதல். இளம் வயதிலேயே முடி உதிர்வ தால் முதுமைத்தோற்றத்திற்கு ஆளாகும் நிலை.

முடி உதிர்வது ஏன்?

முடி உதிர்வு என்றால் அதற்கு அடிப்படை யான காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். முடி உதிர்வு என்பது நோயின் அளவு கோல். உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படைக் கார ணமாகும். தவிர, அதிகமான எண்ணெய்ப் பசை எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான டென்ஷன், இப்படி சில காரணங்களும் கூட இருக்கலாம். காரணம் அறிந்த பின்புதான் சிகிச்சைகளை துவங்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மிக எளிய வழி வெறும் கைகளினால் தலைப்பகுதி யில் இதமாக மசாஜ் செய்து விடுவதுதான். தலையில் இறுக்கமான தொப்பி, ஹேர்பெல்ட் போன்றவற்றை அணி வதாலும் முடி உதிர லாம்.

பொடுகுத் தொல்லையா?

தலைப்பகுதி சருமத்தில் ஏற் படும் வறட்சியின் காரணமாக வும், எண்ணெய் சுரப்பிகள் குறைந்து இறந்த செல்களின் பட லங்கள் உதிர்வதாலும் பொடுகு உண்டாகிறது. இது தொற்றக்கூடிய பிரச்சினை வேறு. எனவே, பொடுகு உள்ளவர்கள் பயன்படுத் திய சீப்பு, டவல், தலையணை உறை போன்ற வற்றை பிறர் பயன் படுத் தவே கூடாது.

பொதுவாக அழகு நிலையங்களில் முடிக்கான, பொடுகு நீக்கும் சிகிச்சைகள், மசாஜ் போன்றவை களைத் தருவார்கள். ஆனால் இங்கு கார ணங்கள் ஆராயப் பட்டு மருந்துகள் தரப்படுகின்றன.

வழுக்கைக்கான காரணம் என்ன?

பரம்பரை தவிர, தலைப்பகுதியில் ஏற்படும் வறட்சியும் அதனால் ஏற்படும் முடி உதிர்வை ஆரம் பத்திலேயே கவனிக் காமல் அலட்சியப் படுத்துவதுமே வழுக்கைக்கு முக் கிய காரணங்களாக அமைகின்றன.

நுனியில் முடி பிளவுபடுவது ஏன்?

உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள தன் அடையாளம்தான் நுனி யில் முடி பிளவு படுவது. உணவு முறை களில் மாற்றம் செய் தால் இந்தப் பிரச் சினை தீரும். இதற் கான பிரத்யேக சிகிச் சைகளும் உண்டு. அதேபோல நரை வேக மாக உண்டாகவும் முடிப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளும் முக்கிய காரணம். முடி பராமரிப்பிற்கு எளிய வழிகள்

அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது அதேபோல் எண்ணெய் தடவா மலும் இருக்கக் கூடாது. தலையை நேரம் கிடைக்கும்போது மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல் லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர் வது நிற்கும்.

குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. ஈரமான தலையை சீப்பினால் வாரக்கூடாது. கூடுமானவரை டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய்ப்பண்டங்கள், இனிப்புப் பொருட்களை உண்ணாமல் தவிர்ப்பது நல் லது. பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். இதேபோல முடி உதிர்வு ஏற்படும் போதும் அலட்சியம் காட்டக்கூடாது. இப்படிச் செய்வது வழுக்கையை உண்டாக்கும்.

பராமரிப்பு

சரியான பராமரிப்பு இல்லாதது, உப்புத் தண்ணீரில் தலை குளிப்பது, போஷாக்கில்லாத ஆகாரம், மருந்தினால் ஏற்படும் பக்க விளை வுள் என பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்கிறது. கூந்தலில் அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவினை அதிகம் சாப்பிட வேண்டும்.

விளக்கெண்ணைய், தேங்காய் எண்ணைய், ஆலிவ் எண்ணைய் ஆகியவற்றை சம அள வில் எடுத்து லேசாக சசூடாக்கி தலையில் மசாஜ் செய்து, வெந்நீரில் மூழ்கிப் பிழிந்த டவ லால் தலைக்கு ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று ஆரோக்கியமாகவும் வளரும். முயற்சித்துத்தான் பாருங்களேன்.


முகத்தின் அழகை மேலும் வசீகரப்படுத்துவதில் கண்கள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றவோ அதைப்போல் உதடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக உதடுகளைப் பராமரிக்காமல் விட்டால் உதடு வரண்டு தோல் உரிந்து அது அவலட்சணமாகிவிடும். ஆகவே உதடுகளைப் பராமரிக்க...

பொதுவான ஆலோசனைகள் :

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அவலட்சணமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம். லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வொஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு விற்றமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும். உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் குளொஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் குளொஸ் தடவப்பட வேண்டும். லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.


கா‌ல்களை எ‌ப்போது‌ம் வற‌ட்‌சியாகவு‌ம் வை‌க்க‌க் கூடாது.பாத இடு‌க்குக‌ள் தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் மரு‌ந்துக‌ள் அ‌ல்லது எ‌ண்ணெ‌யை தடவுங்கள்.

இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள்.

கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கள்.நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.வார‌த்‌தி‌ற்கு ஒரு முறை கா‌ல் ‌விர‌ல் நக‌ங்களை நெ‌‌யி‌ல்க‌ட்டரை‌க் கொ‌ண்டு அக‌ற்று‌ங்க‌ள்


கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமானா‌ல் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சை அ‌ல்லது உருளைக்கிழங்கு துண்டை அ‌ல்லது வெள்ளரி துண்டை அ‌ல்லது இளஞ் சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்கலாம். கண்களுக்குப் போதிய உறக்கம் தேவை. உற‌க்க குறைவதாலு‌ம் கருவளைய‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம். அதிக வேலைப்பளு. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது. இதற்கு கண்களுக்கு அவ்வப்போது இதமளிக்கம் பயிற்சியும் குளிர்ந்த நீரை‌க் கொ‌ண்டு முகத்தை‌க் கழுவுவது‌ம், அடிக்கடி கண் பகுதியில் படு‌ம்படி தெளிப்பதும் நல்லது. கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும். அ‌திகமாக டி‌வி பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். தொட‌ர்‌ந்து பு‌த்தக‌ங்க‌ள் படி‌ப்பது ந‌ல்லது. க‌ண்ணு‌க்கு ‌சிற‌ந்த ப‌யி‌ற்‌சியாக அது அமையு‌ம்.

விளம்பரங்கள்