Welcome to My Website






Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.

மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.

ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.

முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.

கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.

மஞ்சள்:
‘டானின்’ எனப்படும் “ஆன்டி ஆக்ஸிடெண்ட்’ உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.

இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.

பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.

ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.

பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற “சரும நோய்’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.

மைக்ரோ அவனில் சேமியா உப்புமா செய்வது எப்படின்னு
பார்க்கலாம் வாங்க.






INGREDIENTS பட்டியல் வறுத்த சேமியா - 2 கப், நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1, பச்சை மிளகாய்- 1 நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்,
கறிவேப்பிலை கொஞ்சம், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய். சுடு தண்ணீர் - 2 கப், உப்பு தேவைக்கேற்ப




1. மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தாளிக்க கொடுத்திருக்கும்
சாமான்களை சேர்த்து மூடி 3 நிமிடம் வைக்கவும்.
(மூடாமல் வைத்தால் கடுகு, எண்ணெய் ஆகியவை தெளித்து
அவனை சுத்தமாக துடைக்க வேண்டியது ஆகும்)

2. எடுத்து வெங்காயம் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள்
வைக்கவும்.

3.வறுத்த சேமியா, சுடு தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு கலக்கி 5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில்
வைக்கவும்.

4. எடுத்து ஒரு முறை நன்கு கிளறி தேவையெனில்
மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

சேமியா உப்புமா ரெடி.

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .

தேவையானப் பொருட்கள்
மைதா மாவு – 100 கிராம்
தேன் - 60 மிலி
முட்டை – 5
கேஸ்டர் சுகர் – 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.
அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை(சுமார் 10 நிமிடங்கள்) அடிக்கவும்.
பிறகு எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும், பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.
ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பர் /ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.
பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
தித்திக்கும் தேன் கேக் தயார். இதில் தேனின் சுவை தூக்கலாக தெரியும். தேன் சுவை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
மைதா - 100 கிராம்
ரவை - 100 கிராம்
டால்டா - 200 கிராம்
ஏலக்காய் - 2
சீனி - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய் - கால் கிலோ
செய்முறை
மைதாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ரவாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, ரவா, சீனி, தேங்காய், ஏலக்காய், டால்டா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து ஒரு ட்ரேயில் பரப்பி, பிஸ்கட் அளவு வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

பருப்பு இடியாப்பம்

Posted by tamilvili Thursday, September 3, 2009 0 comments

தேவையான பொருட்கள்
இடியாப்ப மாவு - 2 கப்
துவரம்பருப்பு - அரை கப்
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் இடியாப்பங்கள் தயார் செய்து எடுத்து, அவற்றை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
போதுமான நீரில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வேக வைத்த பருப்பு, தேங்காய்த்துருவல், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுமார் கால் மணி நேரம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் இந்த கரைசலை உதிர்த்த இடியாப்பத்தின் மேல் ஊற்றி, கிளறி பரிமாறவும்.

தேவையான பொருட்கள்
மைதா மாவு - கால் கிலோ
ஜீனி - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
சோடா உப்பு - அரைத்தேக்கரண்டி
சுக்குபொடி - இரண்டு தேக்கரண்டி
தேன் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
ஜீனியை பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி உருக்கிக் கொண்டு அதனுடன் பொடித்த ஜீனியையும், தேனையும் சேர்க்கவும்.
இளஞ்சூட்டில் வைத்து கிளறவும். எல்லாம் நன்றாக கலந்தவுடன் இறக்கிவிடவும்.
மைதாவையும், சுக்குப்பொடியையும் ஒன்றாய் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சோடா உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி உருக்கி வைத்துள்ள டால்டா, ஜீனி கலவையை மாவில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ரொட்டி மாவுபோல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனமான சப்பாத்திகளாக இட்டு பிஸ்கட் அச்சுக் கொண்டு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு போர்க் கொண்டு பிஸ்கட் துண்டுகளின் மேல் லேசாகக் குத்திவிட்டு ஒரு நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் வைக்கவும்.
வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பழ பிஸ்கட்

Posted by tamilvili Wednesday, September 2, 2009 0 comments

தேவையான பொருட்கள்
மைதா மாவு -- 200 கிராம்
சர்க்கரை பொடி -- 100 கிராம்
வெண்ணைய் -- 100 கிராம்
கார்ன்ப்ளேக்ஸ் -- 50 கிராம்
முந்திரி பருப்பு -- 25 கிராம்
பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்
உப்பு -- 1 சிட்டிகை
பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்
முட்டை -- 1 என்னம்
வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
செய்முறை
முந்திரியை பொடியாக்கவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும்.
அதனுடன் உப்பு சேர்க்கவும்.
வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும்.
ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைக்கவும்.
ரெடி.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் மாவு, வெண்ணெய் மற்றும் உப்பு கலந்து பிசைந்து கொள்ளவும்.
அதனை நீள உருளையாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அதனை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துண்டுகளை நெய் தடவிய தவாவில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்மீது லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு : 1 1/4 கப்உருளைக்கிழங்கு – 3பச்சை மிளகாய் – 5வெங்காயம் – 3மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டிகடுகு,சீரகம், சோம்பு,உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி (ஒவ்வொன்றும்)நெய் -சிறிதளவுகறிவேப்பில், கொத்துமல்லி- சிறிதளவுஉப்பு தேவையான அளவுஎண்ணை – தேவையான அளவு
செய்முறை
பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்ஹ்து தோலுரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையூம் போட்டு வதக்கிக் கொள்ளவேண்டும்.
அதன்பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறிவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
இதை தக்காளி சாஸுடன் பரிமாரலாம்.

தேவையான பொருட்கள் 2 பேருக்கு

பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு

செய்முறை

பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.

நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு

மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.

ஈஸி கோபி மஞ்சுரியன்

Posted by tamilvili Monday, August 31, 2009 0 comments

தேவையானப் பொருட்கள்
காலிஃபிளவர் – 1 பெரியது

வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

அதன் பின் அத்துடன் தக்காளி சாஸை சேர்க்கவும்.

இப்பொழுது வெங்காயத்தை நான்கு பகமாக வெட்டி கொள்ளவும். அதன் பின் வெட்டிய வெங்காயத்தின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்து கொள்ளவும்.

ஒரு நிமிடம் வதங்கிய பிறகு அதை காளி ஃபிளவர் கலவையுடன் சேர்க்கவும்.

இப்பொழுது சுவையான ஈஸி கோபி மஞ்சுரியன் ரெடி.

தேவையான பொருட்கள்: பனம் பழம் 3 கோதுமை மா 3 சுண்டு சீனி 1/2 சுண்டு உப்பு அளவாக தேங்காய் எண்ணெய் அளவாக செய்முறை: பனம் பழத்தின் தோலை உரித்து எடுத்துவிட்டு கழியாக இருக்கும் பகுதியை நன்றாக பிசைந்து நீரும் சிறிதளவு விட்டு கழியை எடுத்து துணி ஒன்றில் விட்டு வடிக்கவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் சீனியையும், 1 1/2 சுண்டு அவித்த மாவையும், 1 1/2 சுண்டு பச்சை மாவையும் போட்டு நன்றாகக் குழைக்கவும்.

பின்னர் எண்ணெயை சூடாக்கி குழைத்த மாவை கைவிரல்களால் பிழிந்து சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன் நிறமாக வெந்ததும் எடுத்து, ஆறிய பின் பரிமாறலாம். சுலபமான வேலை. பொருட்களும் அதிகம் தேவை இல்லை. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ

கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி)

சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி

சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி

தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு

தேங்காய் எண்ணெய் 1/4 போத்தல் உப்பு அளவாக செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவாக தட்டிய பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வடையைச் சூடாகப் பரிமாறும்போது மிகவும் சுவையாக இருக்கும். (மரவள்ளிக் கிழங்கை விரும்பினால் அவித்தும் மற்றைய கலவைகளுடன் பிசைந்து பொரிக்கலாம்)

தேவையானப் பொருட்கள் கோதுமை மாவு - 170 கிராம் வெண்ணெய் - 115 கிராம் பொடித்த சர்க்கரை - 115 கிராம் பெரிய முட்டை - 2 பேகிங் பவுடர் - 2 தேக்கரண்டி ஜாம் - 30 கிராம் பால் - ஒரு தேக்கரண்டி காரமல் செய்வதற்கு: தண்ணீர் - 50 மில்லி சர்க்கரை - 50 கிராம்

செய்முறை காரமல் செய்முறை: சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.

காரமல் கேக் செய்யும் முறை: பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும். முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும். வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்.

மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.

நன்றாக அடித்த முட்டை வெள்ளையைப் போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும். 7 அங்குல கேக் பேக் செய்யும் 2 தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.

கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 30 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும். முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் அல்லது எனாமல் பாத்திரம் உபயோகிக்கவும். பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது. கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும். தேவையானால் ஐசிங் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் ஜவ்வரிசி - 150 கிராம் மோர் - ஒரு கப் மோர் மிளகாய் - 3 கடுகு - ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு கல் உப்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி ஜவ்வரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதில் மோரை ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்

அதன் பிறகு அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்பிறகு மோருடன் ஊற வைத்த ஜவ்வரிசியை தாளித்தவற்றுடன் போட்டு நன்கு எல்லாம் ஒன்றாகும்படி கிளறி விடவும் பின்னர் பொரித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை பொடி செய்து உப்புமாவில் சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைக்கவும்.

நிமிடம் கழித்து உப்புமா வெந்ததும் மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு பொலபொலவென்று ஆனதும் இறக்கி வைத்து விடவும். ஜவ்வரிசி ரொம்ப கெட்டியாக இருந்தால் கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறி 3 நிமிடம் மூடி வைத்து வெந்ததும் இறக்கவும்ஜவ்வரிசி மோர் உப்புமா தயார். நாம் வழக்கமாக செய்யும் உப்புமாவை விட செய்முறையிலும் ருசியிலும் சற்று வித்தியாசமானது. இதனை நைலான் ஜவ்வரிசியை வைத்து செய்யவும்.


தேவையான பொருட்கள்

  • தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்
  • மைதா மா - 250 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • மாஜரீன் - 250 கிராம்
  • முட்டை - 4
  • வனிலா - 1 தே. கரண்டி
  • வேக்கிங்பவுடர் - 15 கிராம்

செய்முறை

  • பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது)
  • முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.
  • மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.
  • பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.
  • கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும்.
  • பின்பு பேக்கிங்தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குறிப்பு:

சீனீ நன்றாக கரைய வேண்டும். சீனி கரையாவிட்டால் கேக் கருகி விடவும்.

தேவையான பொருட்கள்
கேரட் - 4
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
பிஸ்தா பருப்பு - 8
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.
வழங்கியவர்

கஜு பலகாரம்

Posted by tamilvili Sunday, August 30, 2009 0 comments


தேவையான பொருட்கள்: கோ. மா 250 கிராம்

அரிசி மா 100 கிராம்

கடலை மா 50 கிராம்

நெய் 50 கிராம்

சர்க்கரை 100 கிராம்

அப்பச்சோடா சிறிது

எண்ணெய் 300 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரில் அப்பச்சோடா, சர்க்கரை, நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கையால் கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும் கோதுமை மா, அரிசி மா, கடலை மா மூன்றையும் ஒன்றாக போட்டு கட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு பூரிக்கட்டையில் சிறிதளவு வைத்து சப்பாத்தி போல் ஆக்கி கத்தியால் சதுரமாக சிறிதாக வெட்டிக் கொள்ளவும். சுத்தமான தாச்சியை அடுப்பில் வைத்து மெல்லிய நெருப்பில் காய விடவும் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக வெட்டிய சப்பாத்தித் துண்டுகளை போட்டு சிவந்ததும் எடுத்துவிட வேண்டும். இது சாப்பிட மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது. செய்வதும் எளிது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மரவள்ளிக்கிழங்கு கேக்

Posted by tamilvili Thursday, August 27, 2009 0 comments

தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு -500கிராம்
தேங்காய் -அரைமூடி
ரவா -ஒருகப்
சீனி-முக்கால்கப்
ஏலக்காய் -3
நெய் -50கிராம்
பசும்பால் -அரைகப்
கேசரிபவுடர் -சிறிது
செய்முறை
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி காய் சீவும் கட்டையில் சீவிக்கொள்ளவும்
தேங்காயை துருவிக்கொள்ளவும்
ஏலக்காயை தோலை எடுத்து அரிசியை எடுத்து பொடியாக்கவும்
கிழங்குடன் எல்லா பொருள்களையும் கலந்து கேக் வைக்கும் தட்டில் சிறிது வெண்ணை தடவி கிழங்கு கலவையை அதில் ஊற்றவும்
280° F சூடாகிய அவெனில் அதை வைத்து மேலே சிவந்தவுடன் வெந்தவுடன் எடுத்து துண்டு போட்டு சாப்பிடவும்

விளம்பரங்கள்