Welcome to My Website







நம்மில் தலைமுடிப் பிரச்சினை இல்லாதவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இதற்குக் கிடையாது. பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு தலைப்பொடுகு, இளநரை... இவை ஓயாதப்பிரச்சினை. ஆண்களுக்கு இவை களைவிட தலையாயப் பிரச்சினை வழுக்கை ஏற்படுதல். இளம் வயதிலேயே முடி உதிர்வ தால் முதுமைத்தோற்றத்திற்கு ஆளாகும் நிலை.

முடி உதிர்வது ஏன்?

முடி உதிர்வு என்றால் அதற்கு அடிப்படை யான காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். முடி உதிர்வு என்பது நோயின் அளவு கோல். உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படைக் கார ணமாகும். தவிர, அதிகமான எண்ணெய்ப் பசை எண்ணெயே இல்லாமல் முடி வறண்டு போதல், அதிகமான டென்ஷன், இப்படி சில காரணங்களும் கூட இருக்கலாம். காரணம் அறிந்த பின்புதான் சிகிச்சைகளை துவங்க வேண்டும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மிக எளிய வழி வெறும் கைகளினால் தலைப்பகுதி யில் இதமாக மசாஜ் செய்து விடுவதுதான். தலையில் இறுக்கமான தொப்பி, ஹேர்பெல்ட் போன்றவற்றை அணி வதாலும் முடி உதிர லாம்.

பொடுகுத் தொல்லையா?

தலைப்பகுதி சருமத்தில் ஏற் படும் வறட்சியின் காரணமாக வும், எண்ணெய் சுரப்பிகள் குறைந்து இறந்த செல்களின் பட லங்கள் உதிர்வதாலும் பொடுகு உண்டாகிறது. இது தொற்றக்கூடிய பிரச்சினை வேறு. எனவே, பொடுகு உள்ளவர்கள் பயன்படுத் திய சீப்பு, டவல், தலையணை உறை போன்ற வற்றை பிறர் பயன் படுத் தவே கூடாது.

பொதுவாக அழகு நிலையங்களில் முடிக்கான, பொடுகு நீக்கும் சிகிச்சைகள், மசாஜ் போன்றவை களைத் தருவார்கள். ஆனால் இங்கு கார ணங்கள் ஆராயப் பட்டு மருந்துகள் தரப்படுகின்றன.

வழுக்கைக்கான காரணம் என்ன?

பரம்பரை தவிர, தலைப்பகுதியில் ஏற்படும் வறட்சியும் அதனால் ஏற்படும் முடி உதிர்வை ஆரம் பத்திலேயே கவனிக் காமல் அலட்சியப் படுத்துவதுமே வழுக்கைக்கு முக் கிய காரணங்களாக அமைகின்றன.

நுனியில் முடி பிளவுபடுவது ஏன்?

உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள தன் அடையாளம்தான் நுனி யில் முடி பிளவு படுவது. உணவு முறை களில் மாற்றம் செய் தால் இந்தப் பிரச் சினை தீரும். இதற் கான பிரத்யேக சிகிச் சைகளும் உண்டு. அதேபோல நரை வேக மாக உண்டாகவும் முடிப் பகுதியில் ஏற்படும் அதிர்வுகளும் முக்கிய காரணம். முடி பராமரிப்பிற்கு எளிய வழிகள்

அதிகமாக எண்ணெய் தடவவும் கூடாது அதேபோல் எண்ணெய் தடவா மலும் இருக்கக் கூடாது. தலையை நேரம் கிடைக்கும்போது மென்மையாக மசாஜ் செய்துகொள்வது நல் லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிர் வது நிற்கும்.

குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. ஈரமான தலையை சீப்பினால் வாரக்கூடாது. கூடுமானவரை டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய்ப்பண்டங்கள், இனிப்புப் பொருட்களை உண்ணாமல் தவிர்ப்பது நல் லது. பொடுகு, பேன் போன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை நாட வேண்டும். இதேபோல முடி உதிர்வு ஏற்படும் போதும் அலட்சியம் காட்டக்கூடாது. இப்படிச் செய்வது வழுக்கையை உண்டாக்கும்.

பராமரிப்பு

சரியான பராமரிப்பு இல்லாதது, உப்புத் தண்ணீரில் தலை குளிப்பது, போஷாக்கில்லாத ஆகாரம், மருந்தினால் ஏற்படும் பக்க விளை வுள் என பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்கிறது. கூந்தலில் அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவினை அதிகம் சாப்பிட வேண்டும்.

விளக்கெண்ணைய், தேங்காய் எண்ணைய், ஆலிவ் எண்ணைய் ஆகியவற்றை சம அள வில் எடுத்து லேசாக சசூடாக்கி தலையில் மசாஜ் செய்து, வெந்நீரில் மூழ்கிப் பிழிந்த டவ லால் தலைக்கு ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று ஆரோக்கியமாகவும் வளரும். முயற்சித்துத்தான் பாருங்களேன்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்