Welcome to My Website






சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.

மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.

ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.

முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.

கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.

மஞ்சள்:
‘டானின்’ எனப்படும் “ஆன்டி ஆக்ஸிடெண்ட்’ உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.

இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.

பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.

ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.

பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற “சரும நோய்’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.

மைக்ரோ அவனில் சேமியா உப்புமா செய்வது எப்படின்னு
பார்க்கலாம் வாங்க.






INGREDIENTS பட்டியல் வறுத்த சேமியா - 2 கப், நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1, பச்சை மிளகாய்- 1 நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்,
கறிவேப்பிலை கொஞ்சம், தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய். சுடு தண்ணீர் - 2 கப், உப்பு தேவைக்கேற்ப




1. மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தாளிக்க கொடுத்திருக்கும்
சாமான்களை சேர்த்து மூடி 3 நிமிடம் வைக்கவும்.
(மூடாமல் வைத்தால் கடுகு, எண்ணெய் ஆகியவை தெளித்து
அவனை சுத்தமாக துடைக்க வேண்டியது ஆகும்)

2. எடுத்து வெங்காயம் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள்
வைக்கவும்.

3.வறுத்த சேமியா, சுடு தண்ணீர், உப்பு சேர்த்து
நன்கு கலக்கி 5 நிமிடங்கள் மைக்ரோ ஹையில்
வைக்கவும்.

4. எடுத்து ஒரு முறை நன்கு கிளறி தேவையெனில்
மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

சேமியா உப்புமா ரெடி.

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் இன்ன உணவு இன்ன தன்மையுடையது என்பதை உணர்ந்து உடல்நலனில் கவனமாக இருந்திருக்கின்றனர். இப்போது பலருக்கு என்ன உணவுப்பொருள் என்ன கலோரி என்று கவனமிருக்கிறது உடல் பருமனாகிவிடும் என்ற பயத்தின் காரணமாக , ஆனால் அதில் என்ன
சத்து இருக்கிறது அதை எப்போது சேர்ப்பது எப்போது சேர்க்காமல் இருப்பது என்பது தெரிவதில்லை. அவசரயுகத்தில் எளிதாக சமைப்பதையும் , உடலுக்கு ஒன்று என்றால் மருத்துவர் மட்டுமே கதி என்று இருப்பதையும் இளந்தலைமுறை பழகிக்கொண்டிருந்தால் நம் பாரம்பரிய பெருமைகள் பழம்பெருமைகளாகி அழிந்து விடும்.

இங்கே சில பொருட்களின் தன்மைகள்

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை

இன்னும் எத்தனையெத்தனையோ இருக்கும் நான் எழுதியவை சில மட்டுமே. அவரவர் வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம் கேட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள் . அனுபவத்தில் சிறந்த வயதானவர்களின் பொக்கிஷத்தை மூடி சாவியைத் தொலைத்து விடாதீர்கள் .

தேவையானப் பொருட்கள்
மைதா மாவு – 100 கிராம்
தேன் - 60 மிலி
முட்டை – 5
கேஸ்டர் சுகர் – 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். மற்ற மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.
அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை(சுமார் 10 நிமிடங்கள்) அடிக்கவும்.
பிறகு எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும், பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.
ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேயில் பார்ச்மெண்ட் பேப்பர் /ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.
பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
தித்திக்கும் தேன் கேக் தயார். இதில் தேனின் சுவை தூக்கலாக தெரியும். தேன் சுவை பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
மைதா - 100 கிராம்
ரவை - 100 கிராம்
டால்டா - 200 கிராம்
ஏலக்காய் - 2
சீனி - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய் - கால் கிலோ
செய்முறை
மைதாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ரவாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, ரவா, சீனி, தேங்காய், ஏலக்காய், டால்டா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து ஒரு ட்ரேயில் பரப்பி, பிஸ்கட் அளவு வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்க காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிர பிரச்சனைக்கு அல்ல.

நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

டிஸ்கி

மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே, இதற்காக நாமே மருத்துவராக கருதி கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது, குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்
இடியாப்ப மாவு - 2 கப்
துவரம்பருப்பு - அரை கப்
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் இடியாப்பங்கள் தயார் செய்து எடுத்து, அவற்றை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
போதுமான நீரில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வேக வைத்த பருப்பு, தேங்காய்த்துருவல், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுமார் கால் மணி நேரம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் இந்த கரைசலை உதிர்த்த இடியாப்பத்தின் மேல் ஊற்றி, கிளறி பரிமாறவும்.

தேவையான பொருட்கள்
மைதா மாவு - கால் கிலோ
ஜீனி - 100 கிராம்
டால்டா - 100 கிராம்
சோடா உப்பு - அரைத்தேக்கரண்டி
சுக்குபொடி - இரண்டு தேக்கரண்டி
தேன் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
ஜீனியை பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி உருக்கிக் கொண்டு அதனுடன் பொடித்த ஜீனியையும், தேனையும் சேர்க்கவும்.
இளஞ்சூட்டில் வைத்து கிளறவும். எல்லாம் நன்றாக கலந்தவுடன் இறக்கிவிடவும்.
மைதாவையும், சுக்குப்பொடியையும் ஒன்றாய் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சோடா உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி உருக்கி வைத்துள்ள டால்டா, ஜீனி கலவையை மாவில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ரொட்டி மாவுபோல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனமான சப்பாத்திகளாக இட்டு பிஸ்கட் அச்சுக் கொண்டு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு போர்க் கொண்டு பிஸ்கட் துண்டுகளின் மேல் லேசாகக் குத்திவிட்டு ஒரு நெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் வைக்கவும்.
வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்து 15 முதல் 20 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும்.

கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.

ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

நம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.

கேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை!

காரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையான பொருட்கள்
மைதா மாவு -- 200 கிராம்
சர்க்கரை பொடி -- 100 கிராம்
வெண்ணைய் -- 100 கிராம்
கார்ன்ப்ளேக்ஸ் -- 50 கிராம்
முந்திரி பருப்பு -- 25 கிராம்
பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்
உப்பு -- 1 சிட்டிகை
பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்
முட்டை -- 1 என்னம்
வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
செய்முறை
முந்திரியை பொடியாக்கவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும்.
அதனுடன் உப்பு சேர்க்கவும்.
வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும்.
ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைக்கவும்.
ரெடி.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் மாவு, வெண்ணெய் மற்றும் உப்பு கலந்து பிசைந்து கொள்ளவும்.
அதனை நீள உருளையாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அதனை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துண்டுகளை நெய் தடவிய தவாவில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்மீது லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு : 1 1/4 கப்உருளைக்கிழங்கு – 3பச்சை மிளகாய் – 5வெங்காயம் – 3மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டிகடுகு,சீரகம், சோம்பு,உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி (ஒவ்வொன்றும்)நெய் -சிறிதளவுகறிவேப்பில், கொத்துமல்லி- சிறிதளவுஉப்பு தேவையான அளவுஎண்ணை – தேவையான அளவு
செய்முறை
பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்ஹ்து தோலுரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையூம் போட்டு வதக்கிக் கொள்ளவேண்டும்.
அதன்பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறிவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
இதை தக்காளி சாஸுடன் பரிமாரலாம்.

தேவையான பொருட்கள் 2 பேருக்கு

பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு

செய்முறை

பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.

நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு

மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.

மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவரையும் ஆட்டுவிப்பது இசை. இதேபோல் நம்மில் பலர் புத்தக ஆர்வலராக இருப்போம்.

இத்தகைய பழக்க வழக்கங்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம், டென்ஷனாக இருக்கும்போது புத்தகத்தைப் படித்து பலர் அதிலிருந்து விடுபட முயல்கின்றனர். நூல்களைப் படிக்கும் போது அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவதால் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை.

தொடர்ந்து 6 நிமிடங்கள் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மன அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. படிக்கும்போது இதயம், தசைகளில் ஏற்படும் படபடப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை ஏற்படுவதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டேவிட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

புத்தகம் படிப்பதால் 68 சதவீதம் மன அழுத்தம் குறைகிறது. இசையைக் கேட்பதன் மூலம் 61 சதவீதமும், தேநீர் அருந்துவதால் 54 சதவீதமும் மன அழுத்தம் குறைவதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.

எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.

முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. ஆனால், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

தயாரிப்பது எப்படி?

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.

பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.

சேலம் ஜங்சன், உழவர் சந்தை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் கூட அதிகாலை நேரங்களில் அருகம்புல்சாறு கன ஜோரில் விற்பனையாவதைப் பார்க்கலாம்.

1. தலையணி, தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணிகள் கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள் கொந்திக்காய்

5. கை அணிகலன்கள் காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

6. கைவிரல் அணிகலன்கள் சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ

7. கால் அணிகலன்கள் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு

8. கால் விரல் அணிகள் கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி

9. ஆண்களின் அணிகலன்கள் வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.

ஈஸி கோபி மஞ்சுரியன்

Posted by tamilvili Monday, August 31, 2009 0 comments

தேவையானப் பொருட்கள்
காலிஃபிளவர் – 1 பெரியது

வெங்காயம் - 1

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

அதன் பின் அத்துடன் தக்காளி சாஸை சேர்க்கவும்.

இப்பொழுது வெங்காயத்தை நான்கு பகமாக வெட்டி கொள்ளவும். அதன் பின் வெட்டிய வெங்காயத்தின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்து கொள்ளவும்.

ஒரு நிமிடம் வதங்கிய பிறகு அதை காளி ஃபிளவர் கலவையுடன் சேர்க்கவும்.

இப்பொழுது சுவையான ஈஸி கோபி மஞ்சுரியன் ரெடி.

தேவையான பொருட்கள்: பனம் பழம் 3 கோதுமை மா 3 சுண்டு சீனி 1/2 சுண்டு உப்பு அளவாக தேங்காய் எண்ணெய் அளவாக செய்முறை: பனம் பழத்தின் தோலை உரித்து எடுத்துவிட்டு கழியாக இருக்கும் பகுதியை நன்றாக பிசைந்து நீரும் சிறிதளவு விட்டு கழியை எடுத்து துணி ஒன்றில் விட்டு வடிக்கவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் சீனியையும், 1 1/2 சுண்டு அவித்த மாவையும், 1 1/2 சுண்டு பச்சை மாவையும் போட்டு நன்றாகக் குழைக்கவும்.

பின்னர் எண்ணெயை சூடாக்கி குழைத்த மாவை கைவிரல்களால் பிழிந்து சிறு சிறு உருண்டைகளாகப் போட்டு பொன் நிறமாக வெந்ததும் எடுத்து, ஆறிய பின் பரிமாறலாம். சுலபமான வேலை. பொருட்களும் அதிகம் தேவை இல்லை. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோ

கோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி)

சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டி

சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டி

தனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவு

தேங்காய் எண்ணெய் 1/4 போத்தல் உப்பு அளவாக செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகாய்த்தூள் உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க. கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவாக தட்டிய பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வடையைச் சூடாகப் பரிமாறும்போது மிகவும் சுவையாக இருக்கும். (மரவள்ளிக் கிழங்கை விரும்பினால் அவித்தும் மற்றைய கலவைகளுடன் பிசைந்து பொரிக்கலாம்)

தேவையானப் பொருட்கள் கோதுமை மாவு - 170 கிராம் வெண்ணெய் - 115 கிராம் பொடித்த சர்க்கரை - 115 கிராம் பெரிய முட்டை - 2 பேகிங் பவுடர் - 2 தேக்கரண்டி ஜாம் - 30 கிராம் பால் - ஒரு தேக்கரண்டி காரமல் செய்வதற்கு: தண்ணீர் - 50 மில்லி சர்க்கரை - 50 கிராம்

செய்முறை காரமல் செய்முறை: சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.

காரமல் கேக் செய்யும் முறை: பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும். முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும். வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்.

மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.

நன்றாக அடித்த முட்டை வெள்ளையைப் போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும். 7 அங்குல கேக் பேக் செய்யும் 2 தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.

கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 30 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும். முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் அல்லது எனாமல் பாத்திரம் உபயோகிக்கவும். பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது. கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும். தேவையானால் ஐசிங் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் ஜவ்வரிசி - 150 கிராம் மோர் - ஒரு கப் மோர் மிளகாய் - 3 கடுகு - ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு கல் உப்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி ஜவ்வரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதில் மோரை ஊற்றி இரண்டையும் ஒன்றாக கலந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து மோர் மிளகாயை போட்டு வதக்கவும்

அதன் பிறகு அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்பிறகு மோருடன் ஊற வைத்த ஜவ்வரிசியை தாளித்தவற்றுடன் போட்டு நன்கு எல்லாம் ஒன்றாகும்படி கிளறி விடவும் பின்னர் பொரித்து வைத்திருக்கும் பெருங்காயத்தை பொடி செய்து உப்புமாவில் சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைக்கவும்.

நிமிடம் கழித்து உப்புமா வெந்ததும் மூடியை திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு பொலபொலவென்று ஆனதும் இறக்கி வைத்து விடவும். ஜவ்வரிசி ரொம்ப கெட்டியாக இருந்தால் கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறி 3 நிமிடம் மூடி வைத்து வெந்ததும் இறக்கவும்ஜவ்வரிசி மோர் உப்புமா தயார். நாம் வழக்கமாக செய்யும் உப்புமாவை விட செய்முறையிலும் ருசியிலும் சற்று வித்தியாசமானது. இதனை நைலான் ஜவ்வரிசியை வைத்து செய்யவும்.


தேவையான பொருட்கள்

  • தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்
  • மைதா மா - 250 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • மாஜரீன் - 250 கிராம்
  • முட்டை - 4
  • வனிலா - 1 தே. கரண்டி
  • வேக்கிங்பவுடர் - 15 கிராம்

செய்முறை

  • பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது)
  • முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.
  • மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.
  • பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.
  • கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும்.
  • பின்பு பேக்கிங்தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குறிப்பு:

சீனீ நன்றாக கரைய வேண்டும். சீனி கரையாவிட்டால் கேக் கருகி விடவும்.


காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத் தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.

அதனால்தான் ஆடை, அணிகலன்க ளுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல் லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப் புகள் விற்கப்படுகின்றன.

கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்ற னர். ஆனால் செருப்பு என்பது நமது உள் ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடை யதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலு டன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.

இப்போது திருமணம் போன்ற விசே ஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங் குவது நல்லது. பொருத்தமான செருப்பு களை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.

செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங் குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களை விட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப் பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத் தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.

பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல் லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணி யவும்.

பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப் புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

தேவையான பொருட்கள்
கேரட் - 4
பால் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
பிஸ்தா பருப்பு - 8
வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.
வழங்கியவர்

ஆள் பாதி... ஆடை பாதி

Posted by tamilvili Sunday, August 30, 2009 0 comments

என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

சில பெண்கள் அணிந்துள்ள ஆடை களைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும்... அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந் தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.

அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண் கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது. சிறிய போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.

உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் அழுத்தமான நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங் கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.

நல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக... ஒல்லியாக இருந்தால் பிளை னாக... டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத் தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக... குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். அழுத்தமான நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.

அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது. டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.

மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.

குட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.

காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.

பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.

கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா.

அதை வெள்ளை ரிசூவில் சுற்றி டெட்டோல் அல்லது கலந்த புடவையை நனைத்துஅந்த பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக வையுங்கள். இதனால் உங்கள் கைகளை அலர்ஜிக்கில் இருந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.

உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம். ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.

நவநாகரிக யுகத்தில் நங்கையர் எல்லாம் அங்கமாக ஜொலிக்க தங்கத்தை அணிந்தார்கள். எல்லா அங்கங்களையும் அழகுபடுத்திக் காட்டினாலும் அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம். கடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்வதில் குழப்பம் எற்படலாம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்யவே உங்களுக்கு ஒரு குறிப்பு. *கைப்பை வாங்க செல்பவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் என்ன நிறத்தில் கைப்பையை வாங்கப்போகிறீர்கள் என்று வீட்டிலேயே தீர்மானித்து கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்

*கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்யும் போது அது விலைக்கேற்ற தரமுடையதாக உள்ளதா என பார்க்கவேண்டும்.

* நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்கவேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்யவேண்டும். *கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்கவேண்டும். *கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும்.

*கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்கவேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமானஅளவில் இருபக்கமும் கைப்பை தெரியவேண்டும்.

எட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது கடமை அல்லவா!

நிறத்தையும் பளிச்சென்ற தன்மையையும் பார்த்து ஒருபோதும் தங்கம் வாங்கக்கூடாது. பொலிஷ் மூலம் தங்கத்துக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.மஞ்சள்நிறம் அதிகம் கொண்ட நகைகள் அதிக பெறுமதிமிக்கவை என்று எண்ணி விடாதீர்கள்.வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவதே சிறந்தது. அதற்கு செய்கூலி குறைவு என்பதோடு, விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிக கழிவும் ஏற்படாது.

தங்க நகைகள் வாங்கும் போது பலர் ரசீதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ரசீது இல்லையென்றால் பணம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணி ரசீது வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகிறார்கள். உண்மையில் ரசீது வாங்கினால்தான் பிற்காலத்தில் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். ரசீது வாங்கும் போது நகையின் எடை ,மொடல், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும். கற்கள், முத்துகள் பதித்த நகைகளை வாங்கும் போது அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடைபோல கணக்கிட்டு விடுவார்கள். கற்களுக்கு தனி எடையும் தங்கத்துக்கு தனி எடையும் போடுவதே சரியான தொழில் தர்மம்.

தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.

வழக்கமாக வாங்கும் கடைகளில் தங்கம் வாங்குவது நல்லது. அதனால் நம்பகத்தன்மை கூடும். அதோடு பாதிப்பு ஏதேனும் ஏற்படினும் உடனடி பரிகாரம் காணமுடியும்


அதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும். உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்

முடி உதிர்வது ,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம். கிணற்று தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி உடைந்து போகும். கெமிக்கல் கலந்த ஷாம்போவை உபயோகித்து தலைக்கு குளிக்க வேண்டாம். சோப்பு போன்றவற்றையும் தலைமுடிக்கு உபயோகிப்பது நல்லதல்ல. முடியின் நடுவில் உடைந்த முடியை மாதா மாதம் கட் செய்து டிரிம் பண்ணினால் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும். அதேபோல் அவரவர்களின் முடிக்கு தகுந்த கன்டிஷனர் உபயோகிப்பது நல்லது.

. சிம்பிளாக மேக்கப் செய்து கொள்வதுடன் ஸ்மார்ட்டாகவும் தெரிய வேண்டுமானால், ஹேயர் ரீ பொண்டிங் செய்து கொள்ளலாம். அதனால் முடி சொப்ட்டாக பட்டு போல இருக்கும். ஸ்ரெயிட் ஹெயராகவும் பண்ணிக் கொள்ளலாம். அதனால் நல்ல லுக் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஒரு நல்ல இமேஜையும் இது கொடுக்கும். ஹெயர் ரீபொண்டிங் செய்து கொள்ள விரும்புபவர்கள் பியூட்டி பார்லருக்குச் சென்று செய்து கொள்ளலாம். இதற்கான செலவும் குறைவுதான். அவரவர் முடியின் நீளம் மற்றும் அடர்த்தியைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.

இதே வேளை ஒருவரது தலைமுடி வறட்சியாக இருக்கிறது என்றால் தலை முடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் ஒயிலால் கூந்தலை மசாஜ் செய்து தலை குளிக்கலாம். ஷாம்போ போட்டுக் குளித்தால், கூந்தலில் கன்டிஷனர் தடவி மேலிருந்து கீழ் நோக்கி தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும். கூந்தலை தேய்த்துக் கழுவக் கூடாது. முடியின் வேர்க்காலில் கன்டிஷனர் படாமல் முடியில் மட்டும் அப்ளை செய்வது நல்லது. முதலில் உங்களின் முடி சாதாரண முடி வகையா? அல்லது உடைந்த முடி வகையா? என்று தெரிந்து அதற்கேற்றால் போல் "ஹெயர் ஸ்மூத்திங்' செய்து கொள்ளலாம். அதேபோல் பார்லர்களில் "ஸ்பா' டிரீட்மெண்ட் செய்து கொண்டால்கூட, கூந்தலில் வறட்சி போய்விடும்


அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு..இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?

ஆரோக்கியம் * உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.

இயற்கை தரும் க்ளென்சர்ஸ் * பால் நல்ல க்ளென்சர் என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது.மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.

* தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத் தடவிக் கொள்ளலாம்.

* வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம். பளிச் முகத்துக்கு

* பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!

முகப் பொலிவுக்கு * வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும். கருப்பு திட்டுகள் மறைய * மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்..மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்! கருவளையம் மறைய

* கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும். சருமம் கருமை மாற * முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும். கழுத்தைப் பராமரிக்க

* நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும் ..ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய ‘டபுள் சின் ‘ நாளடைவில் ‘சூப்பர் சின்‘ ஆகி விடும்! முகத்தில் புதுப்பொலிவுக்கு

* தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும். * பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது! சிவந்த இதழ்களுக்கு * சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்! நகங்கள் பொலிவு பெற

* பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும்.பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.

ஸ்டைலாகவும், அழகாகவும் இருக்கத்தான் ஃபேஷன் பொருட்களைப் பயன்படுத்து கிறோம். ஆனால் சிலசமயங்களில் ஃபேஷன் பொருட்களே நம் ஆரோக்கியத்திற்குப் பிரச் சினையாகி விடுகிறது. எந்தெந்த ஃபேஷன் பொருட்கள், எந்தெந்த மாதிரியான பிரச்சி னையை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாமா.

ஸன்கிளாஸ் சூரியனின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஸன்கி ளாஸையே பயன்படுத்துகிறோம். பொது வாக, சற்று டார்க் கலரில் இருக்கின்ற ஸன் கிளாஸைத்தான், பயன்படுத்துகிறோம். ஆனால் உங்களுக்கொன்று தெரியுமா? டார்க் கான கலரில் இருக்கின்ற ஸன்கிளாஸ், சூரிய னிலிருந்து முழுமையாக உங்கள் கண்களைப் பாதுகாக்காது. இது போன்ற கண்ணாடிகள் அல்ட்ரா வயலட் கதிர்களை அதிக அளவு ஈர்த்துக் கொள்கிறது. பொதுவாகவே டார்க் கலர் உடைகள் அதிக அளவு ஒளியையும், வெப்பத்தையும் ஈர்த்துக் கொள்ளும் இல் லையா? அது போலவே ஸ்பெஷல் கோட்டிங் கொடுக்கப் படாத சாதாரண கண் ணாடிகள் கண்களில் எரிச்சல், கண் சிவப் பது போன்ற பிரச்சி னைகளை ஏற்படுத்தி விட்டு விடும். எச்ச ரிக்கை தேவை!

தலைமுடி பள பள கூந்தல் தான் தற்போதைய இளம் சமூகத்தினர் பிடித் தமான ஒன்று. இதையே பிடித்துக் கொண்டு எண் ணற்ற தயாரிப்புக்களை பயண்படுத்துகின்றனர். இதில் நிறையவே கெமிக் கல் கலந்திருக்கிறது. இது உங்கள் தலை முடியின் வேர்க்கால்களை பல மிழக்கச் செய்துவிடு கிறது. விளைவு தலைமுடி கொட்டி வழுக்கையாகி விடுகிற வாய்ப்பிருக்கிறது. அதனால் தரமான ஆயுர்வேத தயாரிப்புக் களைப் பயன்படுத்துங்கள்.

ஜிம்

உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஜிம்முக்குச் சென்று எக்ஸர்சைஸ் செய்வதுதான் நல்ல வழி. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் எக்ஸர்சைஸ் செய்யும்போது அணிந்து கொள்ளும் டைட்ஸ்தான் பிரச்சினையே. இதை போட்டுக் கொண்டால் உங்களுடைய அவுட் லுக். என்னவோ அழகாகத்தான் தெரி யும். ஆனால் எக்ஸர்சைஸ் செய்யும்போது இப்படி டைட்டான "அவுட்ஃபிட்'டை போட் டுக் கொண்டால் வியர்வை முழுவதுமாக வெளியேற முடியாமல் தொடை மற்றும் இடுப்பில் அப்படியே நின்றுவிடும். தொடர் ந்து இப்படி வியர்வை வெளியேற முடியாமல் போனால் அந்த இடங்களிலெல்லாம் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பிருக்கிறது. ஸோ, எக்ஸர்சைஸ் செய்யும்போது தளர் வான கொட்டன் டிரஸ் தான் பெஸ்ட்! வளையங்கள்

வேலைக்குப் போகும் பெண்க ளும் சரி, மொட லிங் செய்பவர் களும் சரி காது களுக்கு அதி கம் பயன் படுத்துவது பெரிய வளையங் கள் தான். ஜீன்ஸ், சுடிதார், ஃபேஷன் புடைவைகள் என்று எல்லாவிதமான உடைக ளுக்கும் இந்த வளை யங்கள் பொருந்துவ தால் இன்றைய இளவட் டங்களின் ஒட்டு மொத்தமாக ஓட்டும் இந்தபேஷன் வளையங் களுக்குத்தான். இப்படி அடிக்கடி பெரிய பெரிய வளையங்களைப் பயன்படுத்தினால் காதுமடலின் அடிப்பகுதி விரிந்து காதுப்பகுதி களில் தீவிரமான இன்ஃபெக்ஷன்களை ஏற் படுத்தி விடும் அதனால் முடிந்த வரை இது மாதிரியான பெரிய பெரிய வளையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் நாலு பேர் பேசுவதைக் கேட்க வாவது நம் காது நல்ல முறையில் இருக்க வேண்டாமா?

ஸ்டொக்கிங்ஸ் எண்பதுகளில் பிரபலமான ஸொக்ஸ் போடும் கலாசாரம் தற்போது மறுபடியும் பேஷனாகிவிட்டது. குறிப்பாக முட்டி வரைக் கும் இறுக்கமாக ஸொக்ஸ் போடும் போது அந்தப் பகுதிகளின் ரத்த ஓட்டத்தை பாதித்து "நரம்புச் சிலந்தி' போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். அதனால் முடிந்த வரை முட்டி வரைக்கும் இறுக்கமான ஸொக்ஸ் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஹைஹீல்ஸ்

சந்தேகமும் இல்லை. ஹைஹீல்ஸ் உங் களை அழகாகவும் உயரமாகவும் கம்பீரமாக வும் காட்டும் தான். ஆனால் தொடர்ந்து பயன் படுத்தினால் முதுகுவலி, ஆர்த்ரட்டீஸ் போன்ற பிரச்சினைகள் உங்களை ஒரு வழி பண்ணி விடும். அதனால் அடிக்கடி ஹைஹீல்ஸைப் பயன்படுத்தாதீர்கள்!


தேவையான பொருட்கள்: கோ. மா 250 கிராம்

அரிசி மா 100 கிராம்

கடலை மா 50 கிராம்

நெய் 50 கிராம்

சர்க்கரை 100 கிராம்

அப்பச்சோடா சிறிது

எண்ணெய் 300 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரில் அப்பச்சோடா, சர்க்கரை, நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கையால் கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும் கோதுமை மா, அரிசி மா, கடலை மா மூன்றையும் ஒன்றாக போட்டு கட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு பூரிக்கட்டையில் சிறிதளவு வைத்து சப்பாத்தி போல் ஆக்கி கத்தியால் சதுரமாக சிறிதாக வெட்டிக் கொள்ளவும். சுத்தமான தாச்சியை அடுப்பில் வைத்து மெல்லிய நெருப்பில் காய விடவும் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக வெட்டிய சப்பாத்தித் துண்டுகளை போட்டு சிவந்ததும் எடுத்துவிட வேண்டும். இது சாப்பிட மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது. செய்வதும் எளிது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.தோற்றம் :அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.அடங்கியுள்ள பொருட்கள் :ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.குணங்கள் :இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.எப்படிப் பயன்படுத்தலாம்?இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.மருத்துவப் பயன்கள்
பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.இக்கீரை பித்த நோயை நீக்கும்.இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். aகஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறுஇந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சைஇலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.தவிர்க்க வேண்டியவை:1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.2. வெயிலில் அலைவது.3. காரமான உணவு வகைகள்.4. வயிறு முட்ட சாப்பிடுதல்.5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை

பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வெள்ளைப்படுதல் என்பது பரம்பரை நோயல்ல... தாய்க்கு வந்தால் மகளுக்கும் வருவதற்கு. அது உஷ்ணம் என்னும் வெட்டைச் சூட்டால் ஏற்படுவது. உங்களுக்கு இருப்பது போலவே உங்கள் மகளுக்கும் சூட்டாு உடம்பாக இயற்கையிலேயே இருந்தால், அவருக்கும் வெள்ளைப்படுதல் வருவதற்கு வாய்ப்புண்டு. மற்றபடி அம்மாவுக்கு, பாட்டிக்கு இருப்பதாலேயே மகளுக்கு வரும் என்பதெல்லாம் இல்லை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியின் மகள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘‘அப்போ வெள்ளைப்படுறது எப்படித்தான் தோன்றுகிறது டாக்டர்?’’‘‘பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பி அதிகரித்து விடுவதால் உஷ்ணம் ஏற்பட்டு, கருப்பையின் வாய்ப் பகுதியில் பெண்களுக்குக் கட்டிகள், புண்கள் மற்றும் சதைகள் தோன்றுகின்றன. வெள்ளைப்படுதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாகிறது. கருப்பையில் ஏற்படும் பால்வினை நோய்க் கிருமிகளின் தொற்று, கருப்பை இடம் விட்டு இடம் மாறல், இரத்தக் குறைவு, கருப்பை பலவீனம், வீக்கம், முறையற்ற புணர்ச்சி முறையால் கருப்பை தாபிதம், அடிக்கடி பிள்ளைப்பேறு, மனக்கவலை, கடின வேலை, மிகுதியான உடலுறவு போன்றவைகளினால் கூட பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்பட்டு பெரும் வேதனை தருகிறது.சினைப்பையிலிருந்து சினை முட்டை கருப்பை நோக்கிப் போகும்போதும் உடலுறவின் உச்ச நேரத்திலும்கூட இந்த வெள்ளைப்படுதல் ஏற்படும். சிலருக்கு மாதவிலக்கிற்கு முன்பாக இது கூடுதலாக இருக்கும். மாதவிலக்கு வருவதற்கான அறிகுறியாக இது தென்படும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த வெள்ளைப்படுதல் நோய் உண்டாகும். மாதவிலக்கு தோன்றி 8 தினங்களுக்குப் பின்புகூட சிலருக்கு இந்நோய் ஏற்படுவதுண்டு.’’ ‘‘டாக்டர், வெள்ளைப்படுதலில் வகைகள் உண்டா? எனக்கு ஏற்பட்டது எந்த மாதிரியான வெள்ளைப்போக்கு?’’ என்றார் அந்தப் பெண்மணி.‘‘வெள்ளைப்படுதலில் பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சை நிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும். சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். உங்களுக்கு ஏற்பட்டது முற்றுவதற்கு முந்தைய நிலை வெள்ளைப்படுதல். இன்னும் கொஞ்ச காலம் கவனிக்காது விட்டிருந்தாலும், அது உங்களை பிறப்புறுப்பு புற்றுநோயில் கொண்டு போய் தள்ளியிருக்கும். வெள்ளைப்படுதலின்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை பெண்களிடம் ஏற்படுத்திவிடும். பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். கருப்பை உட்பகுதியில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். கருச்சிதைவை உண்டாக்கும். நுண்ணுயிர்த் தாக்குதலை ஏற்படுத்தும். இறுதிக் கட்டத்தில் புற்றுநோயை உண்டாக்கி ஆளையே காலி செய்துவிடும்.’’இருவரின் முகத்திலும் அதிர்ச்சி தென்பட்டது. பயந்துகொண்டே மகள் கேட்டார். ‘‘வெள்ளைப்படுறது ஒருத்தர்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவுமா டாக்டர்?’’‘‘சாதாரணமாகப் பரவாது. ஆனால், வெள்ளைப்படுதல் உள்ள பெண்களின் பேண்ட்டீஸ், பாவாடை போன்றவற்றை அடுத்த பெண்கள் அணிய நேரும்போது அவர்களுக்கு இது தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதேபோல், வெள்ளைப்படுதல் உள்ள பெண்ணைப் புணரும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பிடரி ஜன்னி என்னும் நோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.’’பிரமிப்பு விலகாத முகத்தோடு அந்தப் பெண்மணி கேட்டார்... ‘‘வெள்ளைப்படுதலை சித்த வைத்தியத்தின் மூலம் ஆரம்பத்திலேயே எப்படி எளிதாக குணப்படுத்தலாம் டாக்டர்?’’‘‘இந்நோயை விரட்டுவது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பார்த்தால் குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால், நம் பெண்கள் வெட்கப்பட்டுக்கொண்டு இப்பிரச்னை குறித்து வெளியே சொல்வதில்லை. முற்றிய பிறகுதான் முனகுகிறார்கள். சித்த மருத்துவத்தில் இதற்கென ஏராள மருந்துகள் உள்ளன. உலர்ந்த மணத்தக்காளி சாறெடுத்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம். வெள்ளை கல்யாணப் பூசணியை சமைத்துச் சாப்பிடலாம். செம்பருத்தி இலைக் கொழுந்தை பாலில் அரைத்துச் சாப்பிட இந்நோய் விலகும். கருவேலம் கொழுந்தையும் அரைத்துச் சாப்பிடலாம். கொன்றைப் பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டை தோலைப் பொடிசெய்து தேன் சேர்த்துப் பருகலாம். இதெல்லாம் வெள்ளைப்படுதலுக்கான எளிய சித்தவைத்திய முறைகள். வெள்ளைப்படுதலின் அளவு, நோயாளியின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வைத்திய முறைகள் மாறும்’’

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.அறிகுறிகள்:மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.கைவைத்தியம்:1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.உணவுப்பழக்கம்:* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

வாய்ப் பகுதியில் உண்டாகக் கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யா-கோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும். தற்காலத்தில் விஞ்ஞானமும் மருத்துவமும் மிகவும் முன்னேறியிருக்கும் நிலையிலும் கூட, ஈறுகளிலிருந்து குருதி வடிதல் வாய்ப்பகுதியைப் பாதிக்கின்றது.


ஈறுப் பகுதியில் நோய் உண்டாவதற்கான அறிகுறியே இரத்தம் வடிதலாகும். சரியாக சொல்லப் போனால் ஈறிலிருந்து குருதி வடிதல், பல்லெயிற்று வீக்கம் என்ற நோயிற்கான அறிகுறியாகவே கூடுதலாக தோன்றும். இதைச் சரியாக கவனிக்காவிட்டால்; பின்பு இந் நோய் முற்றி, ஆபத்தான பற்குழி நோயை உண்டாக்கிவிடும். இவற்றிற்கும் சிகிச்சை செய்யாவிடில் பின்பு பற்கள் தானாகவே கழன்று விளத்தொடங்கும்.
கூடுதலானோருக்கு ஈறிலிருந்து குருதி வடிதல் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உருவாவதுண்டு. இது பொதுவாக இனிப்பு கூடிய மேற்கத்திய நாட்டு உணவுகளை கூடுதலாக உட்கொள்ளும் போது அவ் உணவிலுள்ள இனிப்பு, பற்களிலுள்ள பற்றீரியா கிருமிகளின் விருத்திக்குக் காரணமாகி, இக்கிருமிகள் ஈறுப் பகுதியை பாதிக்கத் தொடங்கும்.
இந் நோய் உருவாகாமலிருக்க ஒரு நாளிற்கு இரு முறையாவது பல் துலக்குங்கள். அத்துடன் இனிப்புப் பண்டங்கள் உண்பதை குறைப்பதுடன், ஒழுங்கான இடைவெளியில், பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று உங்கள்பற்களைப்பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
நோய் உண்டாவதற்கான காரணங்கள்
பற்களின் கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள மென்மையான தசைப்பகுதியில், பல்லெயிற்று வீக்கம் ஏற்பட்டு இதன் காரணமாக பற்களை தசையுடன் பிடித்து வைத்திருக்கும் வேர்கள் நலிவடைந்து போகும்.
இனிப்பு பண்டங்களையோ அல்லது பானங்களையோ அருந்தியதன் பின்பு பல் துலக்காமல் விடும் போது இந் நேரங்களில் பற்றீரியாக் கிருமிகளின் விருத்தி அதிகரிக்கும். ஆகவே ஒழுங்கான முறையில் பல் துலக்குவதன் மூலமும், உணவை உட்கொண்ட பின்பு நன்றாக வாயை கொப்பளிப்பதன் மூலமும் வாய்ப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கலாம்.
பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும் போது ஈறுப்பகுதி கூடுதலாக மென்மையடைவதால், அதன் மூலம் குருதி வடிதல் அதிகரிக்கும். இந் நிலையில் கூடுதலாக பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
விற்றமின் ஊ குறைவு, குருதி உறையாக் கேடு, வெண்புற்று நோய் போன்றன ஏற்பட்டாலும் ஈறிலிருந்து குருதி உண்டாக வாய்ப்புண்டு.

நோயின் அறிகுறிகள்.
சில வேளைகளிரல் குருதி வடியும் போது சாதுவான நோவு ஏற்படும்.
பற்களை துலக்கும் போதோ, வாயைக் கொப்புளிக்கும் போதோ, உமிழ் நீரிலோ இரத்தம் காணப்படும்.
மொறுமொறுவான உணவுப் பண்டங்களை உட்கொள்ளும் போது குருதி வடிதல் உண்டாகும்.
ஈறிலிருந்து தான் குருதி வடிகிறதென்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?
பற் சிகிச்சை நிபுணர் பற்களிற்கும் அதன் தசைக்கும் இடையில் நீண்ட கூரான இரண சிகிச்சை ஆயுதத்தை செலுத்தி பார்ப்பதன் மூலம் குருதி எங்கிருந்து வடிகிறதென்பதை கண்டு கொள்வார்.
இரத்தப் பரிசோதனை மூலம் குருதி உறையாக் கேடு நோய் உண்டாகியிருக்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம்.
இந் நோயிற்கான சிகிச்சை முறைகள் என்ன?
பற்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்றீரியாக் கிருமிகள் உண்டாதற்கான மூல காரணத்தை கண்டு பிடித்து அகற்றுதல் வேண்டும்.
விற்றமின் குறைவால் உண்டாகியிருந்தால் அதற்கான விற்றமின் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.
சிற்றிரஸ் பானங்கள், மொறுமொறுவான உணவுகள், கார உணவுகள், மதுபானங்கள், சிகரெட்டு போன்றவை குருதி வடிதலை மிகைப்படுத்தும்.
செயற்கையான பற்கள், குருதி வடிதலை மிகைப்படுத்தும். ஆகவே இவற்றை உணவை உட்கொள்ளும் போது மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.
நீரில் தோய்ந்த பஞ்சையோ, அல்லது மெல்லிய துணியையோ குருதி வடியும் ஈறில் சிறிது நேரத்திற்கு வைப்பதன் மூலம் குருதி கசிவதை நிற்பாட்டலாம்.
மென்மையான பற் தூரிகை கொண்டு பற்களை துலக்கலாம். உப்புத் தண்ணீர், அல்லது அல்ககோல் சேர்ந்த வாய் கொப்புளிக்கும் திரவம் கொண்டு வாயை கொப்புளிக்குமாறு உங்கள் பற்சிகிச்சை நிபுணர் அறிவுறை வழங்கக் கூடும்.
ஈறிலிருந்து குருதி வடிதலை தடுப்பதற்கு வீட்டில் கையாளக் கூடிய முறைகள்.
காலையும், மாலையும், உப்புக் கலந்த இளஞ் சுட்டு நீர் கொண்டு, வாயை கொப்பளிப்பதன் மூலம் சவ்விலுள்ள வீக்கத்தை குறைத்து சுற்றோட்டத்தை ஒழுங்காக்கலாம்.
பற்களை ஒழுங்காக துலக்குவதன் மூலமும், பற்களிற்கும் மென்சவ்விற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் உணவை பல்குத்தி கொண்டு துப்பரவு செய்தல் மூலமும் வாய்ப்பகுதியை சுத்தமாக பேணலாம்.

தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும். அப்போது தான் நகத் திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந் தெடுங்கள்.* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.* தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.* நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.
கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.
நகம் வெட்டுவதற்கு முன்
நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.
வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.நகத்தில் வெடிப்பு இருந்தால் நைல் பாலிஷ் போட்டால் மறையும்.நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.

மரவள்ளிக்கிழங்கு கேக்

Posted by tamilvili Thursday, August 27, 2009 0 comments

தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு -500கிராம்
தேங்காய் -அரைமூடி
ரவா -ஒருகப்
சீனி-முக்கால்கப்
ஏலக்காய் -3
நெய் -50கிராம்
பசும்பால் -அரைகப்
கேசரிபவுடர் -சிறிது
செய்முறை
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி காய் சீவும் கட்டையில் சீவிக்கொள்ளவும்
தேங்காயை துருவிக்கொள்ளவும்
ஏலக்காயை தோலை எடுத்து அரிசியை எடுத்து பொடியாக்கவும்
கிழங்குடன் எல்லா பொருள்களையும் கலந்து கேக் வைக்கும் தட்டில் சிறிது வெண்ணை தடவி கிழங்கு கலவையை அதில் ஊற்றவும்
280° F சூடாகிய அவெனில் அதை வைத்து மேலே சிவந்தவுடன் வெந்தவுடன் எடுத்து துண்டு போட்டு சாப்பிடவும்

தேவையானப் பொருட்கள்
பச்சரிசி-இரண்டு கோப்பை
உளுத்தம்பருப்பு-அரைக்கோப்பை
சாதம்-அரைக்கோப்பை
வெந்தயம்-அரைதேக்கரண்டி
உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
ஆப்பச்சோடா-ஒரு சிட்டிகை
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-இரண்டு
கேரட் - 1/4 கப்
பீன்ஸ் - 1/4 கப்
கொத்தமல்லி-1/2கட்டு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்-தேவையான அளவு
வெங்காய இலை-கொஞ்சம்
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து களைந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
அடுத்த நாள்சாதம்போட்டு தோசைக்கு அரைப்பதைப் போன்று மைய்ய அரைக்கவும்.
உப்பைப் போட்டு நன்கு கரைத்து ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்கவும்.
நன்கு புளித்தவுடன் ஒரு சிட்டிகை ஆப்பச்சோடாவை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
கேரட்,பீன்ஸ்,வெங்காயம், பச்சைமிளகாய்,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை மிக மிக சிறியதாக நறுக்கி வைக்கவும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சற்று தடிமனான தோசைப் போல் வார்க்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகலவையில் ஒரு பிடியளவு எடுத்து ஊத்தாப்பத்தின் மீது பரவலாக போட்டவும். தொடர்ந்து தோசை கரண்டியால் கலவையை சற்று அழுத்தி விடவும்.மூடி போட்டு வேகவிடவும்
பிறகு எண்ணெயை சுற்றிலும் ஊத்தாப்பத்தின் மீதும் ஊற்றி திருப்பி போட்டு காய்கறி கலவை சிவக்க வெந்தவுடன் எடுத்து விடவும்.
சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

தேவையானவை:
முட்டை-4,
பெரிய வெங்காயம்-2,
எண்ணெய்-4 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு,
கறிவேப்பிலை-சிறிதளவு,
மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்.
அரைக்க:
காய்ந்த மிளகாய்-6-8,
பூண்டு-4
.செய்முறை:
காய்ந்த மிளகாயை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவையுங்கள்.அத்துடன் பூண்டு சேர்த்து அரைக்கவும்.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து அடித்துக்கொள்ளுங்கள்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து,அடித்த முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுள் வைத்து வேகவிடுங்கள்.நன்கு வெந்தவுடன் வெளியே எடுத்து,ஆறியதும் துண்டாக நறுக்குங்கள்.
ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து,அரைத்த விழுதைச் சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.பச்சை வாசனை போனதும் வெங்காயம்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி,அதனுடன் நறுக்கிய முட்டை துண்டுகள்,கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி இறக்குங்கள்.சுடசுட சாப்பிடுங்கள்.

அரிசி - 250 கிராம்கத்தரிகாய் - 200 கிராம்தக்காளி - 4பூண்டு - 6 பல்பட்டை, கிராம்பு, சோம்பு சிறிதுமிளகாய் தூள், கரம் மசாலா - சிறிதுவெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்ககொத்துமல்லி இலை, உப்பு
செய்முறை:அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.
வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கத்தரிகாய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர் விட்டுவேகவைக்கவும்.
கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை, தூவி இறக்கவும்.
இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ப்ரட்டை எண்ணெய்யில் பொறித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.

தேவையானவை
தயிர் 1 கப்அரிசிமாவு 2 தே.கமஞ்சள் தூள் 1/4 தே.கபச்சைமிளகாய் 4உப்பு தேவைகேற்ப்ப
தாளிக்க----------எண்ணெய் 1 தே.கஉளுந்து 1/4 தே.கவெந்தயம் 1/4 தே.கபெருங்காய தூள் 1/4 தே
ஓரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில்தாளிக்கவுள்ளதை போட்டு 1 நிமிடம் வைக்கவும்.தயிரை கடைந்து அதில் அரிசிமாவு மஞ்சள் தூள், உப்புபோட்டு கலந்து வைக்கவும்.இதை தாளித்தவையோடு சேர்த்து 2 நிமிடங்கள் மைக்ரோவில் வைக்கவும்.
மோர்குழம்பு பருப்பு உசிலியோட சாப்பிட்ட நன்றாக இருக்கும்.
குறிப்பு: மைக்ரோவேவின் ப்ராண்டை பொறுத்து நிமிடங்களை அட்ஜஸ்ட்
செய்யவும்..

மசாலா பிரட் பீட்சா

Posted by tamilvili Wednesday, August 26, 2009 0 comments

தேவையானப் பொருட்கள்
ப்ரட் ஸ்லைஸ் - பத்து

குடைமிளகய் - இரண்டு

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

தக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்

துருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்

நெய் - ஐந்து டீ ஸ்பூன்

உப்பு - ஒரு டீ ஸ்பூன்

மல்லி இலை - முன்று டீ ஸ்பூன்

எண்ணை - ஒரு டீ ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

ஓமம் - கால் டீ ஸ்பூன்

சீரகம் - அரை டீ ஸ்பூன்

சோம்பு - அரை டீ ஸ்பூன்

செய்முறை

முதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு & சீரகத்தை வாசனை வர வறுத்துப் பொடிக்கவும்.

குடை மிளகாய் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்

வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பொடித்த தூளைப் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும்.

இரண்டும் பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, தக்காளித் துண்டங்களை சேர்த்து ஒரு நிமிடம் வெதுப்பி இறக்கவும்.

இந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும்.

பிரட் துண்டங்களைப் ஒரு தட்டில் வைத்து வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும்.

அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும்.

இப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு டீ ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ப்ரட் துண்டங்களை அடுக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.

இப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும்.

இப்படியே எல்லாத் துண்டங்களையும் வறுத்து எடுக்கவும்.

ஒவ்வொரு துண்டையும் இறக்கிய உடனேயே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

தேவையானப் பொருட்கள் காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்)

ப்ரெளன் சுகர் - 300 கிராம்

முட்டை - 4

மைதா - 300 கிராம்

ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லி

கறுவாத்தூள் - 2 தேக்கரண்டி

ஆப்ப சோடா - ஒரு தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் வைத்து துருவிக் கொள்ளவும்.

அந்த கலவையில் ராப்ஸ் எண்ணெய், சலித்து வைத்திருக்கும் மைதா கலவை, கறுவாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடிக்கவும். அவனை முற்கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும். கேக் ட்ரேயில் பட்டர் தடவிக் கொள்ளவும் அல்லது பேக் பேப்பர் விரித்து வைக்கவும். நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சுவையான காரட் கேக்.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3

அரிசி (பொன்னி/பாஸ்மதி/ஜஸ்மின்)- 1/2 கப்

வெங்காயம் - 2

உள்ளி - 4 பல்லு

கறித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - சிறிது

செத்தல் மிளகாய் - 2

கடுகு - சிறிது

பெரிய சீரகம் - சிறிது

உளுத்தம்பருப்பு - சிறிது

கடலைப்பருப்பு - சிறிது

உப்பு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கஜு(முந்திரி)/கச்சான்(நிலக்கடலை) - சிறிது

ரெய்சின் - சிறிது

கொத்தமல்லி இல

செய்முறை அரிசியை களைந்து சமைத்து வைக்கவும்(சோறு)

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.

உள்ளி, வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

அவித்த உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுள் கறித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, செத்தல் மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுள் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுள் மசித்த கிழங்கை போட்டு கிளறவும்.

பின்னர் சோற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்க்கவும்.

சுவையான உருளை சாதம் தயார்.

இதனை பரிமாறும் தட்டில் போட்டு கொத்தமல்லி இலை, பட்டர் அல்லது நெய்யில் வறுத்த ரெய்சின், கஜு/கச்சானை தூவி பரிமாறவும்.

கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா.

அதை வெள்ளை ரிசூவில் சுற்றி டெட்டோல் அல்லது கலந்த புடவையை நனைத்துஅந்த பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக வையுங்கள். இதனால் உங்கள் கைகளை அலர்ஜிக்கில் இருந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.

உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம். ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.

*நகைகள் வாங்கச் செல்லும்முன் தங்கத்தின் வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். *நகைகள் வாங்கச் செல்லுமுன் எந்த நகை வாங்கச் செல்கிறோம் என்பதை உறுதி செய்த பின்னரே கடைக்குச் செல்ல வேண்டும். *தரமான கடைகளில் நகைகளை வாங்குங்கள் காரணம் வீதிக்கு வீதி நகைக்கடைகள் உள்ளன. *நீங்கள் எவ்வளவு பணத்திற்கு நகைவாங்கப்போகிறீர்கள் என்பதனை கடைக்குச் செல்லுமுன் தீர்மாணிக்க வேண்டும். *செய்கூலி எவ் வளவு சதவீதம் சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதனை கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். *நீங்கள் குறித்துக்காட்டும் வடிவத்தில் நகை செய்வதற்கான பணத்தினை கேட்டுத் தீர்மானித்து முற்பணம் கொடுத்து பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

*நகைகள் செய்வதற்காக ஓடர் கொடுக்கும் போது எவ்வளவு தங்கத்தில் செய்யப்படுவதாக பதியப்பட்டுள்ளதோ அதேபோல் நகைவேலை முடிவடைந்த பின்னர் கடையிலிருந்து எடுத்துவரும்போது நகையின் அளவை நிறுத்துப் பார்க்கவேண்டும். *நகைகள் வாங்கும்போது கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை விடுத்து பொன்னாலான ஆபரணங்களை வாங்கினால் பணத்தின் தரத்திற்கு ஏற்ப நகை காணப்படும்.

* நீங்கள் வாங்கும் நகை எந்த வகையைச்சார்ந்தது என்பதை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் நீங்கள் வாங்கும் தங்க நகையில் குறியீடுகள் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நகைகளை பாதுகாப்பது எப்படி? நகைகளை அணிவதற்கு முன்னதாகவே பவுண்டேஷனோ பவுடரோ போட்டுக்கொள்ளுங்கள். நகைகளை அணிந்த பின் இவற்றைப்பூசிக்கொண்டால் நகைகள் பொலிவிழந்து விடும்.

*நகைகளை கழற்றி பத்திரப்படுத்தும் போது வெல்வெட் துணியில் போட்டு வைப்பது நல்லது. வெறும் தகரப் பெட்டிகளில் போட்டுவைத்தால் கீறல்கள் விழுந்து பொலிவு கெடும்.

*ஒவ்வொரு நகையும் தனித்தனி பெட்டிகளில் போட்டுவைத்தால் எப்போதும் புத்தம் புதிதாகவே காட்சி தரும். *நிரந்தரமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாரந்தோறும் சுத்தம் செய்யவேண்டும். *நகைகளை கழுவி சுத்தம் செய்யும் போது இளஞ்சுடுநீரில் ஷாம்புவைக் கலந்து மென்மையான தூரிகையால் தேய்த்து கழுவினால் “பளிச் சென்றிருக்கும்

விளம்பரங்கள்