அரிசி - 250 கிராம்கத்தரிகாய் - 200 கிராம்தக்காளி - 4பூண்டு - 6 பல்பட்டை, கிராம்பு, சோம்பு சிறிதுமிளகாய் தூள், கரம் மசாலா - சிறிதுவெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்ககொத்துமல்லி இலை, உப்பு
செய்முறை:அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.
வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கத்தரிகாய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர் விட்டுவேகவைக்கவும்.
கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை, தூவி இறக்கவும்.
இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ப்ரட்டை எண்ணெய்யில் பொறித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.
தேவையானவை
தயிர் 1 கப்அரிசிமாவு 2 தே.கமஞ்சள் தூள் 1/4 தே.கபச்சைமிளகாய் 4உப்பு தேவைகேற்ப்ப
தாளிக்க----------எண்ணெய் 1 தே.கஉளுந்து 1/4 தே.கவெந்தயம் 1/4 தே.கபெருங்காய தூள் 1/4 தே
ஓரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில்தாளிக்கவுள்ளதை போட்டு 1 நிமிடம் வைக்கவும்.தயிரை கடைந்து அதில் அரிசிமாவு மஞ்சள் தூள், உப்புபோட்டு கலந்து வைக்கவும்.இதை தாளித்தவையோடு சேர்த்து 2 நிமிடங்கள் மைக்ரோவில் வைக்கவும்.
மோர்குழம்பு பருப்பு உசிலியோட சாப்பிட்ட நன்றாக இருக்கும்.
குறிப்பு: மைக்ரோவேவின் ப்ராண்டை பொறுத்து நிமிடங்களை அட்ஜஸ்ட்
செய்யவும்..
தேவையானப் பொருட்கள்
ப்ரட் ஸ்லைஸ் - பத்து
குடைமிளகய் - இரண்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்
துருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்
நெய் - ஐந்து டீ ஸ்பூன்
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
மல்லி இலை - முன்று டீ ஸ்பூன்
எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
ஓமம் - கால் டீ ஸ்பூன்
சீரகம் - அரை டீ ஸ்பூன்
சோம்பு - அரை டீ ஸ்பூன்
செய்முறை
முதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு & சீரகத்தை வாசனை வர வறுத்துப் பொடிக்கவும்.
குடை மிளகாய் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பொடித்த தூளைப் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி குடைமிளகாய் சேர்க்கவும்.
இரண்டும் பச்சை வாசனை போக வதங்கியதும் உப்பு, தக்காளித் துண்டங்களை சேர்த்து ஒரு நிமிடம் வெதுப்பி இறக்கவும்.
இந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும்.
பிரட் துண்டங்களைப் ஒரு தட்டில் வைத்து வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும்.
அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும்.
இப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு டீ ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு ப்ரட் துண்டங்களை அடுக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும்.
இப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும்.
இப்படியே எல்லாத் துண்டங்களையும் வறுத்து எடுக்கவும்.
ஒவ்வொரு துண்டையும் இறக்கிய உடனேயே மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
தேவையானப் பொருட்கள் காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்)
ப்ரெளன் சுகர் - 300 கிராம்
முட்டை - 4
மைதா - 300 கிராம்
ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லி
கறுவாத்தூள் - 2 தேக்கரண்டி
ஆப்ப சோடா - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் வைத்து துருவிக் கொள்ளவும்.
அந்த கலவையில் ராப்ஸ் எண்ணெய், சலித்து வைத்திருக்கும் மைதா கலவை, கறுவாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடிக்கவும். அவனை முற்கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும். கேக் ட்ரேயில் பட்டர் தடவிக் கொள்ளவும் அல்லது பேக் பேப்பர் விரித்து வைக்கவும். நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சுவையான காரட் கேக்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
அரிசி (பொன்னி/பாஸ்மதி/ஜஸ்மின்)- 1/2 கப்
வெங்காயம் - 2
உள்ளி - 4 பல்லு
கறித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
செத்தல் மிளகாய் - 2
கடுகு - சிறிது
பெரிய சீரகம் - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது
கடலைப்பருப்பு - சிறிது
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கஜு(முந்திரி)/கச்சான்(நிலக்கடலை) - சிறிது
ரெய்சின் - சிறிது
கொத்தமல்லி இல
செய்முறை அரிசியை களைந்து சமைத்து வைக்கவும்(சோறு)
உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.
உள்ளி, வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
அவித்த உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுள் கறித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, செத்தல் மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுள் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுள் மசித்த கிழங்கை போட்டு கிளறவும்.
பின்னர் சோற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்க்கவும்.
சுவையான உருளை சாதம் தயார்.
இதனை பரிமாறும் தட்டில் போட்டு கொத்தமல்லி இலை, பட்டர் அல்லது நெய்யில் வறுத்த ரெய்சின், கஜு/கச்சானை தூவி பரிமாறவும்.
கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா.
அதை வெள்ளை ரிசூவில் சுற்றி டெட்டோல் அல்லது கலந்த புடவையை நனைத்துஅந்த பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக வையுங்கள். இதனால் உங்கள் கைகளை அலர்ஜிக்கில் இருந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.
உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம். ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.
|


*நகைகள் வாங்கச் செல்லும்முன் தங்கத்தின் வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். *நகைகள் வாங்கச் செல்லுமுன் எந்த நகை வாங்கச் செல்கிறோம் என்பதை உறுதி செய்த பின்னரே கடைக்குச் செல்ல வேண்டும். *தரமான கடைகளில் நகைகளை வாங்குங்கள் காரணம் வீதிக்கு வீதி நகைக்கடைகள் உள்ளன. *நீங்கள் எவ்வளவு பணத்திற்கு நகைவாங்கப்போகிறீர்கள் என்பதனை கடைக்குச் செல்லுமுன் தீர்மாணிக்க வேண்டும். *செய்கூலி எவ் வளவு சதவீதம் சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதனை கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். *நீங்கள் குறித்துக்காட்டும் வடிவத்தில் நகை செய்வதற்கான பணத்தினை கேட்டுத் தீர்மானித்து முற்பணம் கொடுத்து பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.